இந்திய மீனவர்களின் அத்துமீறல் மீண்டும் அதிகரிப்பு – யாழ் மீனவர்கள் குற்றச்சாட்டு


இந்திய மீனவர்களின் அத்துமீறல் மீண்டும் அதிகரிப்பு – யாழ் மீனவர்கள் குற்றச்சாட்டு

இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும்

இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் யாழ்குடா கடற்பரப்பில் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நெடுந்தீவு தொடக்கம் நைனா தீவு, எழுவைதீவு, அனலைத் தீவு, மாதகல், பருத்தித்துறை, வடமராட்சி வரை இந்திய மீனவர்களுடைய ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

இழுவை மடி ஊடாக எமது தொழிலாளர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் 100 தொடக்கம் 150 வரையிலான படகுகள் கரை அளவுக்கு வந்து தொழிலாளர்களுடைய சொத்துக்களை நாசம் செய்துள்ளன.

கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்களுடைய வலைகள் அறுக்கப்பட்டு சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்களுடைய அத்துமீறலை கட்டுப்படுத்துவதற்கு துறை சார் அமைச்சரும் அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.