நாட்டை அரசியல் கட்சிகள், அரசாங்கம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சிவில் சமூகம் ஆட்சி செய்தது, ஆனால் இப்போது அவர்கள் அதிகாரத்தை இழந்துள்ளனர்.
அடுத்த கட்டம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை, ஏனென்றால் முழு அரசியல் அமைப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இது ஒரு பொருளாதார வீழ்ச்சி. பொருளாதாரத்தின் மோசமான நிர்வாகம். IMF இன் ஆதரவு இல்லாமல் இதுபோன்ற நெருக்கடி ஏற்படும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் அறிந்தோம். IMF சென்று நிதி பெற விரும்பினோம், ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை.
நாணய வாரியம் மற்றும் திறைசேரியின் கருத்துக்கள் முரண்பாடானவை. எங்கள் கருத்து வேறு. இது ஒரு அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது.
மக்கள் போராட்டங்கள் நடக்கின்றனர். மக்கள் இன்னும் தெருக்களில் இருக்கிறார்கள், அவர்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறார்கள், நாட்டை அரசியல் கட்சிகள், அரசாங்கம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சிவில் சமூகம் ஆட்சி செய்தது, ஆனால் இப்போது அவர்கள் அதிகாரத்தை இழந்துள்ளனர்” எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.