இன்று (08) முதல் 10 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்சார சபையின் தலைவர் எம். சி.பெர்டினாண்டோ இதனை தெரிவித்தார்.
தற்போது 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக நிலவும் மின்வெட்டு எதிர்காலத்தில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நாளைய தினம் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.