கொழும்பில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து


கொழும்பில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

கொழும்பு கிராண்ட்பாஸ் பாலத்துறை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.

வீட்டை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டட நிர்மாண தொழிலாளி ஒருவரும் அயல் வீட்டில் இருந்த 14 வயதான பாடசாலை மாணவனுமே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

வீடு இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கு சிக்கி இருந்த இவர்கள் அருகில் இருந்தவர்கள் மீட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர்.

சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.