கொக்கட்டிச்சோலை படகு விபத்தில் 3 மாணவர்களும் ஆசிரியரும் உயிரிழப்பு!


கொக்கட்டிச்சோலை படகு விபத்தில் 3 மாணவர்களும் ஆசிரியரும் உயிரிழப்பு!

கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில்

கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மாணவர்கள் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

களுமுந்தன்வெளி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்கள் குறித்த பகுதிக்கு ஆசிரியரொருவருடன் இன்று பிற்பகல் சென்றிருந்தனர்.

இதன்போதுஇ கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் இவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் உயிரிழந்திருந்ததுடன்இ மூன்று மாணவர்களும் காணாமல் போயிருந்தனர்.

இதனையடுத்து காணாமல் போன மாணவர்களை மீட்பதற்காக பிரதேச மக்களுடன் இணைந்து பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் பணிகளின் போதே குறித்த மூன்று மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாணவர்களை மீட்பதற்கு முயற்சித்த ஆசிரியரே நீரில் மூழ்கி உயிரிழந்தார்.