கொழும்பில் அணி திரண்ட பல்கலைக்கழக மாணவர்கள்


கொழும்பில் அணி திரண்ட பல்கலைக்கழக மாணவர்கள்

கொழும்பில் சற்றுமுன் பல்கலைக்கழக மாணவர்கள் பெருந்திரளானோர் இணைந்து போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்றைய தினம் கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்களுடன், பேராசிரியர்களும் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் நேற்றைய தினம் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.