அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல ராப் இசை பாடகர் ஷிராஸ் யூனுஸ் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (12) அதிகாலை கொழும்பு காலி முகத்திடலில் உள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்ட களத்தில் கூட்டத்தினருக்காக நிகழ்ச்சியை நிகழ்த்திய பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.