கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கு ஏற்படப்போகும் நிலை


கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கு ஏற்படப்போகும் நிலை

எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் அஜித் எஸ்.குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இறக்குமதியாளர்களுக்கு அடுத்த மாதத்திற்குத் தேவையான மூலப்பொருளை இறக்குமதி செய்ய வங்கிகள் மூலம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் கிடைத்தால், அடுத்த ஆறு மாதங்களுக்கு தொழிலை தொடர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1,200 ரூபா வரையில் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கோழி உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளதுடன் பண்ணைகள் மூடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி விலை மீது ஏற்படவுள்ள மாற்றம்

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்