சர்வதேச நாணய நிதியத்தின் பிணை நாட்டின் வளர்ச்சிக்கு போதாது – ஹர்ஷ!


சர்வதேச நாணய நிதியத்தின் பிணை நாட்டின் வளர்ச்சிக்கு போதாது – ஹர்ஷ!

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இலங்கைக்கு அவசியமானதாக இருந்தாலும், நிஜத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ள அவர், “இலங்கையின் வளர்ச்சியை உருவாக்குவதே தற்போதைய சவாலாகும்.

எனினும், தேவைகள் மோசமடைந்து வரும் நிலையில், இழக்கப்படும் தொழில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

எனவே தேவையான வளர்ச்சியை உருவாக்க, உள்நாட்டில் இயங்கும் வர்த்தகம் அல்லாத வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் போதுமானதாக இருக்காது.

இதற்காக ‘சுவர்களை தகர்த்து உலகிற்கு பாலங்கள் கட்டப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் சீர்திருத்தங்கள் இல்லாமல் உள்நாட்டு தீர்வு உள்ளது என்று மேடைகளில் கூறுவது சாத்தியமற்ற அம்சமாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய புதிய செய்திகள் – இதையும் பாருங்கள்!

 

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை