இலங்கை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்படுவதன் காரணமாக ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெலிகம, மிரிஸ்ஸ பகுதிகளில் இந்த ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது. மிரிஸ்ஸ நகரிலிருந்து வெலிகம நகரத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் பேருந்துகளில் முகம் கவசம் அணியாமல் பயணிக்கின்றனர்.
அத்துடன் சுற்றுலாப் பயணிகள் முகக் கவசமின்றி வெலிகம முழுவதம் சுற்றி திரிகின்றனர். வர்த்தக நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் முகக் கவசமின்றி வெளிநாட்டவர்கள் சுற்றி திரிவதனால் பாரிய அபாமிக்க நிலைமை ஏற்பட்டுள்ளது.
வங்கிகள் உட்பட அவர்கள் முகக் கவசம் அணிவதில்லை என அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் முகக் கவசம் அணியாமல் பயணிக்கும் வெளிநாட்டவர்களை பொலிஸார் அவதானித்தாலும் கண்டுக்கொள்ளாமல் செல்வதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலி – மாத்தறை பேருந்து ஒன்றில் வெளிநாட்டவர்கள் முகக் கவசமின்றி நுழைய முயற்சித்த போது பயணிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
எனினும் அதனை கண்டுக்கொள்ளாமல் அவர்கள் பேருந்திற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். வெளிநாட்டவர்களை முகக் கவசம் அணிந்து வருமாறு கூறும் தங்களுக்கு அவர்களின் மொழி தெரியாதென வெலிகம வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனார்.