நாட்டில் பெரும்பாலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்!


நாட்டில் பெரும்பாலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்!

மாலை நேரங்களில் மழை

நாட்டில் பெரும்பாலும் இடியுடன் மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (05) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில். 50 மில்லிமீட்டருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யலாம்.

இதனிடையே, வடமத்திய மாகாணத்தில் இடைக்கிடை கன மழை பெய்யக் கூடிய சாத்தியமுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

ஏனைய புதிய செய்திகள் – இதையும் பாருங்கள்!

நாட்டில் பெரும்பாலும் இடியுடன் மழை