அலி சப்ரியை உடனடியாக பதவி நீக்கவும்; ஞானசார தேரர் போர்க்கொடி


அலி சப்ரியை உடனடியாக பதவி நீக்கவும்; ஞானசார தேரர் போர்க்கொடி

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும், அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் ஸஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது என பொதுபல சேனா அமைப்பின் செயலாளரும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

நீதி அமைச்சர் அலி சப்ரி என்னை நீக்க வலியுறுத்தியுள்ளதுடன் முரண்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளார்.

முதலில் அவர் யார்? அவர் மக்களின் வாக்குகளில் தெரிவான பிரதிநிதியும் இல்லையே. ஜனாதிபதியின் நம்பிக்கையை வென்றவர் என்ற காரணத்துக்காக அவரை நீதி அமைச்சராக்கியுள்ளனர்.

அதனை நாம் எதிர்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.