பாணந்துறை – பிங்வத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் உந்துருளி கைப்பற்றப்பட்டுள்ளது.
வாத்துவ – வேரகம வீதியில் வைத்து இன்று (28.02.2023) இந்த உந்துருளி கைப்பற்றப்பட்டுள்ளது.
பாணந்துறை – பிங்வத்த பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கடவத்தை – கிரில்லவல பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஒருவர் உயிரிழந்தார்.
உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் உந்துருளியின் இலக்க தகடும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.