நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்த பெண் ஒருவர் கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
46 வயதுடைய குறித்த பெண் 60 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.