இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய சூரிய வெவ பிரதேசத்தில் தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த ஆணின் தாயை, கணவன் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (05.02.2023) பதிப்பாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் 58 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களும் தலைமறைவாகியுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.