யாழ்தேவி தடம் புரள்வு – வடக்கு தொடருந்து சேவை வழமைக்கு திரும்பியது!


யாழ்தேவி தடம் புரள்வு – வடக்கு தொடருந்து சேவை வழமைக்கு திரும்பியது!

யாழ்தேவி தடம்புரள்வு சேவை வழமை

யாழ்தேவி தடம்புரள்வு சேவை வழமை

யாழ்தேவி தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக மஹவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டிருந்த வடக்கு தொடருந்து சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

நேற்று பிற்பகல் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தின் பெட்டி ஒன்று தடம் புரண்டது.

இதனால், மஹவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நிகவெரட்டிய மற்றும் மொரகொல்லாகம இடையிலான வீதியும் தடைபட்டது.

பின்னர், தடம் புரளாமல் இருந்த தொடருந்தின் முன்பெட்டிகளுக்கு பயணிகள் மாற்றப்பட்டு கொழும்பு கோட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த தொடருந்து பெட்டி தடம் புரண்டதன் காரணமாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் தொடருந்து சேவை தாமதமானதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய புதிய செய்திகள் – இதையும் பாருங்கள்!

யாழ்தேவி தடம்புரள்வு சேவை வழமை