ஒரு கிலோ நாட்டரிசியை ஒரு ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் வாய்ப்பு யாழ்ப்பாண மக்களுக்கு நேற்று (22) கிடைத்துள்ளது.
பொருட்களின் விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலில் இருந்து மக்களை மீட்பதும், கொள்வனவு மூலம் அவர்களின் மனதை திருப்திப்படுத்துவதுமான வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாண மக்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுமித்ரயோ சங்கத்தினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு கிலோ நாட்டு அரிசி 1 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.