பிரதமர் பதவி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் தற்போது அந்த பதவியை வகிப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் கூறியுள்ளார்.
இன்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குமளவுக்கு தமது கட்சியில் எவருக்கும் மூளையில் கோளாறு கிடையாது என நினைப்பதாக, அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கூறியுள்ளார்.
பிரதமர் பதவி மற்றும் தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் தொடர்பில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.