ரைசினா டயலாக் மாநாட்டில் பங்குகொள்ள ஜீவன் தொண்டமான் இந்தியா விஜயம்!


ரைசினா டயலாக் மாநாட்டில் பங்குகொள்ள ஜீவன் தொண்டமான் இந்தியா விஜயம்!

ரைசினா டயலாக் மாநாட்டில் பங்குகொள்ள

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஊடக செயலாளர் இன்று (01.03.2023) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் Raisina Dialogue மாநாடு நாளை (02.03.2023) நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டை தவிர, மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அமைச்சர் இந்தியாவில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்பார். இந்தியாவுக்கு செல்லும் இலங்கை குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்குகின்றார்.

இந்நிலையில் மார்ச் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதிவரை குறித்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.