10 நாட்களுக்கு நாட்டில் மின் வெட்டு


10 நாட்களுக்கு நாட்டில் மின் வெட்டு

எதிர்வரும் 10 நாட்கள் காலப்பகுதியில், இடைக்கிடையே மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் முன்கூட்டியே தம்மை தயார்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் மின்வெட்டு திட்டத்தை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே, முன்நடவடிக்கையாக பொதுமக்களை அறிவுறுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.