இலங்கைக்கு தடை விதித்த இரண்டு நாடுகள்
பாகிஸ்தான்,பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு தமது நாட்டுக்குள் நுழைய ஐக்கிய அரபு இராச்சியம் தற்காலிக தடை விதித்துள்ளது.
அத்துடன்,வெளிநாட்டு விமானங்களின் வருகைக்கும் ஐக்கிய அரபு இராச்சியம் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு முதல் தற்காலிக தடை விதிக்கப்படவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு மாலைத்தீவு பயணத்தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.