கொரோனா தடுப்பூசி செலுத்த எண்ணியுள்ளவர்களுக்கு முக்கிய செய்தி
கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்ததாமல் இருப்பது சிறந்தது என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் காணப்படுமாயின் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வர வேண்டாமென்றும் தொற்று நோய்பிரிவின் விசேட வைத்திய நிபுணர், சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில் எவ்வித பலனுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.