இலங்கை மின்சார சபை தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மின்வெட்டு அட்டவணையை (Power cut schedule) வெளியிட்டுள்ளது.
மாலை 5.30 மணிக்கும் 9.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்காக மின்தடை ஏற்படும் பகுதிகள் 4 குழுக்களாக மின் பாவனையாளர் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின் பிறப்பாக்கிகள் கிடைக்காததன் விளைவாக போதுமான உற்பத்தி இல்லாததால், மின்வெட்டு நடவடிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
மின்வெட்டு அட்டவணையை காண கீழே அழுத்துங்கள்.